கண்டறி

ஆய்வு 10

வழிபாடு: நம் மேய்ப்பரான கடவுளுக்கு புகழ்.

சங்கீதம் 23:1-6

படி 1: கதையை வாசிக்கவும்

பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்

x1.0
  23:1யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.
    2அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார்,
  அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.
    3அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.
  தமது பெயருக்காக அவர் என்னை,
    நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
  4மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே
    நான் நடந்தாலும்
  நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,
    ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;
  உமது கோலும் உமது தடியும்,
    எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.

  5என் பகைவர்களின் சமுகத்தில்
    நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர்.
  நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;
    என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
  6நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும்
    நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும்,
  நான் யெகோவாவினுடைய வீட்டில்
    என்றென்றுமாய் வாழ்வேன்.

நிலை 2: கதையை மீண்டும் சொல்லுங்கள்

சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.

படி 3: கதையை கண்டறிக.

நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.


Get it on Google Play
Download on the App Store

Get Discovery Bible Studies on your phone

Discover copyright ©2015-2026 discoverapp.org

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.